10/20/10

கவிதைகள் உனக்காக!!!



கடற்கரையோரம் கைகோர்த்து நெடுந்தூரம் நடக்கையில்,

கடலலைகளில் நடந்து வந்த கால்தடங்கள் அடித்துசென்றபோதும்

ஈரம் குறையவில்லை,

அவள் விரல்களை

இறுக பிடித்த

என் உள்ளங்கையில்...

______________________________________




கவிதைகள் எழுதுவதில்

அவளுக்கு விருப்பம் இல்லாதபோதும்

நான் ரசிக்க அவள் எழுதிய கவிதையில்

பிழைகள் பல தென்பட்டபோதும்,

எனக்கு அதில் தெரிந்ததெல்லாம்,

அவளின்,

அளவில் அடங்கா காதல் மட்டும் தான்!!!!

______________________________________