5/13/12

ஹைக்கூ



நீ,
என்னை மறந்துவிட்டதை,
"உன் வார்த்தைகள்",
வெளிப்படுத்துகின்றது..
நான், 
உன்னை நேசித்துக் கொண்டிருப்பதை
"என் இதயம்"
துடித்து,
வெளிப்படுத்துகின்றது ♥



நேற்று..
என் விழிகளில்,
மலர்ந்தாய்..

இன்று..
என் மனதில்,
மலர்கிறாய்..

நாளை..
என் கல்லறையில்,
மலர்வாய்...

உயிர் பிரிந்து போனாலும்,
உன்னை பிரிவதறியேன்..




அன்பே...

உன் பிரிவில்,
உனக்கான வார்த்தைகளை
இழந்திருக்கிறேன்...
இருப்பினும்,
இதயவீணை
உன்
நினைவுகளின்,
ராகங்களை
இசைத்துகொண்டுதான் இருக்கிறது







மரங்கொத்தியாய்

உன் நினைவுகள்,
குத்தி குத்திக் கிழிக்கிறதாலே
இன்று...
என் இதயத்திலும்
துவாரம் ஒன்றை உணர்கிறேன்.
உன் நினைவுகள் என்பதாலே,
வலியும் சுகமாகிறது...!








தென்றல் மெல்லமாய்
உரசிப் போகும் வேளையில்,
பரிதவிக்கும்,
மலரின் சுகமான வேதனையை,
உன் மூச்சுக்காற்று,
என்னைத் தீண்டி,
வெப்பம் இதயம் வரை பாய்ந்த போது,
நானும் உணர்ந்தேன்...!











பிரிந்துபோன உன்னை,
நினைத்துக் கொண்டிருக்கவில்லை...
என்னை
நேசித்த உன்னை தான்,
மறக்க முடியாமல் தவிக்கிறேன்...!
அன்பே...!
நீ பிரிந்தாலும்,
நீங்காமல்
உன் நினைவுகள்,
நெஞ்சோடு இல்லாமல்..
நெஞ்சாகவே
இருக்கிறது...!