5/13/12

நீங்காத நினைவுகளாய், நீ!!!

 



உன்னை மட்டுமே
பார்த்து ரசித்த,
"என் விழிகள்",
உன் உருவம் தேடாமல்
இருக்ககூடும்...

உன்னிடம் மட்டுமே
பேசி லயித்த,
"என் வார்த்தைகள்",
உன் செவியில் வாழாமல்
மடியக்கூடும்...

உன்னோடு மட்டுமே
நடந்து கழிந்த,
"என் மாலைகள்",
உன் துணை இல்லாமல்
கழியக்கூடும்...

உன்னோடு மட்டுமே
உரையாடி கரைந்த,
"என் இரவுகள்",
உன் குரல் கேட்காமல்
விடியக்கூடும்...

உன்னை மட்டுமே
தேடி அலைந்த,
"என் கனவுகள்",
உன்னை அடையாமல்
கலையக்கூடும்...


ஆனால்,

உன்னை மட்டுமே
நேசிக்கத் தெரிந்த,
"என் இதயம்"
உன் நினைவுகள் இல்லாமல்
துடிக்க இயலாது...

No comments:

Post a Comment